முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 22 May 2018

முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானியின் விளக்கமறியல் நீடிப்பு!


இந்திய வர்த்தகரிடம் லஞ்சப் பேரம் நடாத்தி முற்பணம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டு பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி ஐ.கெ மகநாம மற்றும் முன்னாள் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.



56 கோடி ரூபா லஞ்சம் பேசி, அதனை 20 கோடி ரூபாவாகக் குறைத்துக் கொண்ட நபர்கள் 2 கோடி ரூபா முற்பணம் பெற்ற நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, மகநாம தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் நிலத்திற்கு வீதி அபிவிருத்தியின் போது வழங்கப்படும் இழப்பீட்டையும் தனது பெயரில் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment