திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தெல் குமார என அறியப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாதாள உலக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை ஆங்காங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சிறிமாபுர பகுதியில் தரித்து நின்ற லொறியொன்றுக்குள் இருந்த குறித்த நபர் மீது காரில் வந்த அடையாளந் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் காயப்பட்டவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment