தெரிந்திருந்தால் நடக்க விட்டிருக்க மாட்டேன்: ராஜித - sonakar.com

Post Top Ad

Tuesday 8 May 2018

தெரிந்திருந்தால் நடக்க விட்டிருக்க மாட்டேன்: ராஜித


பல விடயங்கள் தானிருந்திருந்தால் நடந்திருக்காது என பல காலங்களாக தெரிவித்து வரும் ராஜித சேனாரத்ன, லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மகநாமவின் நியமனமும் தனக்குத் தெரிந்திருந்தால் தடுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.



அளுத்கம வன்முறையின் போதும் தானிருந்திருந்தால் அதை நடக்க விட்டிருக்க மாட்டேன் என தெரிவித்து முஸ்லிம்களின் அன்பை சம்பாதித்துக் கொண்ட ராஜித, காணி அமைச்சின் செயலாளர் தான் ஜனாதிபதி செயலக பிரதானியாக நியமிக்கப்படுகிறார் என்பது தனக்குத் தெரிந்திருந்தால் தடுத்திருப்பேன் என்கிறார்.

ஏலவே, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நபரே ஜனாதிபதி செயலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடததக்கது.

No comments:

Post a Comment