மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்: ஜி.எல் - sonakar.com

Post Top Ad

Monday 14 May 2018

மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்: ஜி.எல்


நடைமுறை அரசின் நடவடிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் பொஹட்டுவ ஆட்சி மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளரை நிறுத்துவது உறுதியென தெரிவித்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ச ஏலவே இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள நிலையில், 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென்பதால் மாற்றீடாக கோத்தபாயவின் பெயர் முன்மொழியப்பட்டு வருகிறது.

இதேவேளை, மைத்ரிபால சிறிசேனவும் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளதுடன் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment