1980களில் தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதையே தலையாய கடமையாகக் கொண்டிருந்ததாகவும் அதன் பின்னணியில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை தானாக உருவாகும் எனவும் மீண்டும் மலேசிய பிரதமராக தெரிவாகியுள்ள மஹதிர் முஹம்மத் மைத்ரிபால சிறிசேனவுக்கு 2016ல் அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியா விஜயம் சென்றிருந்த மைத்ரிபால சிறிசேன அவ்வேளையில் மலேசிய முன்னாள் பிரதமர் மஹதிரை சந்தித்திருந்தார். இதன் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை 92 வயதான மஹதிர் முஹம்மத் மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிபடத்தக்கது.
No comments:
Post a Comment