க/ அக்குறனை அஸ்ஹர் மத்திய கல்லூரி பாடசாலை சுற்றாடல் குழுவினரால் பாடசாலை மேற்கொள்ளப்பட்ட தோட்ட அறுவடை நிகழ்ச்சி நேற்றைய தினம் இடம்பெற்றது.
தரம் 9 மாணவர்களின் முயற்சியின் பயனாக பாடசாலையில் உருவாக்கப்பட்ட தோட்டத்திலேயே இவ்வறுவடை நிகழ்ந்தது.
இதில் கல்லூரி அதிபர் A.L Anwer அவர்களும் பிரதி அதிபர் M.S.F Farzana அவர்களும் மற்றும் பகுதி தலைவர்களான M.M Faizal, A.L.M Noufy மற்றும் MRS Naleer, A.S Ramziya அவர்களும் பேன்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்ட பொறுப்பாசிரியர் A.W.F Sharmila மற்றும் நிகழ்ச்சித்திட்ட தலைவர்களான M.T.A.S.M Mahir, M.S.F Haroosa, B. Hazana Farwin மற்றும் சுற்றாடல் குழு அங்கத்தவர்கள் M.R.F Rizwana கலந்து சிறப்பித்தார்கள்.
இங்கு உரையாற்றிய பாடசாலை அதிபர், இம்முயற்சியை வரவேற்பாதகவும் இதுபோன்ற தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனையும் மாணவர்களுக்கு எத்திவைத்ததுடன் சக ஆசிரியர்களும் அம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
'ஆரோக்கியமான வாழ்க்கையே சிறந்த கல்வியின் சக்தியாகும்'
-Mrs A.W.F Sharmila(NDT Food technology, BA)
பொறுப்பாசிரியர்
No comments:
Post a Comment