டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை நாட்டுக்குள் கடத்திச் செல்ல முயன்ற முன்னாள் சுங்கப் பரிசோதகர் ஒருவர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2.45 கிலோ கிராம் தங்க ஆபரணங்களை பிறிதொரு நபர் கொண்டு வந்திருப்பதாகவும் அதனை நாட்டுக்குள் எடுத்துச் செல்ல முயன்ற வேளையில் குறித்த முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 1.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment