2020ல் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த ஐக்கிய தேசியக் கட்சி 2015 மக்கள் அலையின் பின்னணியில் பொது வேட்பாளரை ஆதரித்து வெற்றி கண்டதுடன் பொதுத் தேர்தலிலும் வெற்றி கண்டது.
எனினும் கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தோல்வியுற்ற நிலையில் கட்சியை மறுசீரமைத்து புத்துணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே, தற்போது கட்சிப் பிரமுகர்கள் தனியாட்சி குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment