2020ல் ஓய்வு பெற மாட்டேன்: மைத்ரி சூளுரை! - sonakar.com

Post Top Ad

Monday 7 May 2018

2020ல் ஓய்வு பெற மாட்டேன்: மைத்ரி சூளுரை!


இன்னொரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனும் வாக்குறுதியோடு பொது வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன, தனது பணி இன்னும் முடியவில்லையென்பதால் 2020ல் ஓய்வு பெறப் போவதில்லையென தெரிவிக்கிறார்.



மஹிந்த ராஜபக்ச அரசியலை விட்டு ஒதுங்குவிடுவார் எனும் எதிர்பார்ப்பில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, 2020ல் வெஸ்ட்மினிஸ்டர் முறைமையைத் தழுவி பிரதமர் ஆட்சியை நிறுவி, அதன் மூலம் கௌரவ ஜனாதிபதியாக நியமனம் பெற்று மேலும் ஐந்து வருடங்கள் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளுடன் பதவியில் வீற்றிருப்பார் எனவே மைத்ரி தொடர்பில் அரசியல் மட்டத்தில் எதிர்பார்ப்பு நிலவியது.

எனினும் தற்போது தான் ஓய்வுபெறப் போவதில்லையென மைத்ரி தெரிவிக்கின்றமையும் ஏலவே சிறுபான்மை மக்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment