தென் பகுதி, காலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சூழ்நிலையால் ஏறத்தாழ 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம்.
கடவத்சதர பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 150க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment