மொனராகல-பொத்துவில் வீதியை எதிர்நோக்கிய வகையில் அமையப் பெற்றிருந்த கடைத்தொகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் 9 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ள அதேவேளை 15 கோடி ரூபாவுக்க மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தீ விபத்தின் பின்னணி குறித்து விசாரணைகள் தொடர்கின்ற அதேவேளை, அதிகாரிகளின் கவனயீனமே தீ பரவுவதற்குக் காரணம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கும்புக்கன இராணுவத்தினரின் உதவியுடன் தீயணைப்புப் படையினர் நீண்ட போராட்டத்தின் பின் தீயணைப்பை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment