மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 3.30 அளவில் 186,000 ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றில் வந்த இருவர் கூரிய ஆயுதம் கொண்டு மிரட்டி இக்கொள்ளையை நடாத்தியிருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையர்கள் பயணித்த வாகனத்தின் அடையாளம் தேடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment