திகன பகுதியில் மீண்டும் பதற்றம்; ஆங்காங்கு வன்முறை! - sonakar.com

Post Top Ad

Monday 5 March 2018

திகன பகுதியில் மீண்டும் பதற்றம்; ஆங்காங்கு வன்முறை!


திகன பிரதேசத்தில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையில், தற்சமயம் இடம்பெற்று வரும் மரண ஊர்வலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள கடும்போக்குவாதிகள் ஆங்காங்கு கல் வீச்சு மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு பாரிய அனர்த்தத்தைத் தவிர்க்கும் வகையில் பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்று மரண ஊர்வலத்தோடு ஆங்காங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.


திகன பகுதிக்கு செல்வதற்கு ஏலவே பொலிசார் தடை விதித்திருந்த போதிலும் ஊர்வலம் செல்லும் வழிகளில் ஆங்காங்கு இவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment