தம்புத்தேகமயில் கடந்த வாரம் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 51 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைதான 59 பேரில் எண்மருக்கு ஏலவே பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சியிருந்த 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம - அம்பாறை சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாரம் திகன பதற்றம் நிலவுகின்றமையம் உள்ளூராட்சித் தேர்தலில் அரசு படுதோல்வியடைந்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment