இலங்கையின் அரசியல் 1980 களின் மனநிலையிலிருந்து இன்னும் வெளிவராது பின் தங்கியிருக்கிறது என தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
உலகின் ஏனைய சமூகங்கள் ஐந்து தலைமுறைகள் முன்னேறியுள்ள போதிலும் இலங்கையின் அரசியல் மாத்திரம் தொடர்ந்தும் பின் தங்கியிருப்பதாகவும் பொருளாதார, தொழிநுட்ப வளர்ச்சியில் இலங்கை மிகவும் பின் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சலுகைகளுக்காக தங்கி வாழ்தல், இனவாத அரசியல் போன்ற வட்டங்களிலிருந்து இலங்கை வெளிவர முடியாமல் துடிக்கும் நிலையில் சம்பிக்க இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment