அவசர கால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனி நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்தத்தை அனுபவித்த நாட்டின் குடிமக்களாக சமாதானத்தின் அருமை தெரிந்தவர்கள் எனவும் இனியும் ஐக்கியத்தைக் குழப்ப வழி விட முடியாது என்றும் அவர் மேலும் வீரவசனம் பேசியுள்ளார்.
எனினும், அம்பாறை முதல் திகன வரை நடந்த இன வன்முறைகளை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறி, அச்சூழ்நிலை மூலம் தனக்கெதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்தும் ரணில் தப்பிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment