கட்டுகஸ்தொட்ட பகுதியில் கல்வீச்சு மற்றும் தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Monday 5 March 2018

கட்டுகஸ்தொட்ட பகுதியில் கல்வீச்சு மற்றும் தாக்குதல்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் 'உறுதி' செய்து சந்திக்கு சந்தி பொலிசாரை நிறுத்தி பாதுகாப்பு ஏற்பாடு செய்ததாக வீராப்பு பேசியுள்ள நிலையில் கட்டுகொஸ்தட்டயில் முச்சக்கர வண்டிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இனவாதிகளின் கல்வீச்சு மற்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சம்பவத்தில் வாகனங்கள் சிலவும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள அதேவேளை அருகில் உள்ள ஊர்களுக்கும் வெ வ்வேறு அணிகள் அச்சறுத்தலை ஏற்படுத்தி வருவதாக அறியமுடிகிறது.



எனினும், விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment