திகன கலவரம் 'திட்டமிடப்பட்ட' செயற்பாடு: அநுர குமார! - sonakar.com

Post Top Ad

Tuesday 6 March 2018

திகன கலவரம் 'திட்டமிடப்பட்ட' செயற்பாடு: அநுர குமார!



திகன பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இன வன்முறைகள் நன்கு திட்டமிட்ட செயற்பாடு என தெரிவித்துள்ளார் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திசாநாயக்க.

பொருளாதார மற்றும் நிர்வாக வீழ்ச்சியை சந்தித்துள்ள அரசாங்கம், அதனை மூடி மறைக்கவே இவ்வாறான ஒரு கைங்கரியத்தைக் கண்டும் காணாமல் இருப்பதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையிலேயே பல முஸ்லிம் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றமையும் திகன பகுதியில் எரியூட்டப்பட்ட வீடொன்றுக்குள் அப்துல் பாஸித் எனும் இளைஞன் சிக்கி ஷஹீதாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment