மத்திய மாகாணத்தில் முஸ்லிம் விரோத வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா, பூந்தோட்டம் - மதீனா நகரிடையில் பள்ளிவாசல் முன் டயர்கள் எரிக்கப்பட்டதனால் பதற்றம் நிலவியுள்ளது.
அம்பாறையில் ஆரம்பித்து, திகன, தெல்தெனிய மற்றும் மத்திய மாகாணத்தின் ஏனைய இடங்களுக்கும் வன்முறை பரவி வரும் நிலையில் வவுனியாவில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment