திகன விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Monday 5 March 2018

திகன விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி!


முஸ்லிம் இளைஞர்கள் சிலரின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள வாலிபர் உயிரிழந்ததன் பின்னணியில் நேற்றிரவு முதல் திகன பகுதியில் நிலவி வரும் பதற்றம் மற்றும் வன்முறை தொடர்பில் சுயாதீனமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மைத்ரிபால சிறிசேன.

முஸ்லிம் பகுதிகளில் போதிய அளவு சேதங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இடங்களுக்கு வன்முறையைப் பரப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.


இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைபாட்டினால் முஸ்லிம்கள் தரப்பும் தற்காப்புக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. தற்போது விழித்துக்கொண்டுள்ள அரசியல் தலைமைகள் விசாரணை மற்றும்  கள விஜயம் என மெதுவாக அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment