ஐக்கிய தேசியக் கட்சியை ஏகமானதாக ஆதரிப்பதன் விளைவையே இன்று சமூகம் எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்து தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய நிலவரம் தொடர்பில் இன்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்ட ஓழுங்கினை நிலை நாட்ட முடியாத பொலிஸ் மா அதிபர் இன்றைய தினமே சிஐடி குழுவொன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிப்பதாகவும் இத்தனை அசமந்தப் போக்குடன் அரசாங்கம் செயற்படுவதற்குத் தகுந்த எதிர் நடவடிக்கை அவசியப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment