அக்குறணை, உக்குவளை பகுதிகளில் அச்ச சூழ்நிலை; அவதானம்! - sonakar.com

Post Top Ad

Monday 5 March 2018

அக்குறணை, உக்குவளை பகுதிகளில் அச்ச சூழ்நிலை; அவதானம்!




திகனயில் ஆரம்பித்து கட்டுகஸ்தொட்ட வரை பல்வேறு கிராமங்களில் தாக்குதல்களை நடாத்தியுள்ள இனவாதிகள் குழுவினர் அக்குறணை, வறகாமுற, எல்வல பகுதிகளை இலக்கு வைத்து சிறு குழுக்களாக நகர்வதாக பிரதேச மக்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இப்பகுதிகளில் வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லையாயினும் அலவத்துகொட பகுதியிலிருந்து எல்வல, உக்குவளை பகுதி நோக்கி நகர்ந்த குழுவொன்று வத்தேகம பாதையில் காணப்பட்டுள்ளது.



இந்நிலையில், மாத்தளை மாவட்டத்திலும் அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்கும்படி அவதானிகள் வேண்டிக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment