கடந்த 7ம் திகதி முதல் இலங்கையில் நிலவி வரும் சமூக வலைத்தள பாவனைத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.
கண்டி வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் வைபர் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனைத் தாண்டி சமூக வலைத்தள பாவனை இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், இன்று சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment