தனது ஆட்சியின் கீழ் அண்மையில் இடம்பெற்ற இன விரோத வன்முறை நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய வன்முறை போன்று அரசியல் சக்திகள் சித்தரிப்பதாகவும் ஆனாலும் இதற்கு முன்னும் சிங்கள - முஸ்லிம் மக்களிடையேயான பாரதூதரமான மோதல்களும் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
ஜப்பான் சென்றுள்ள மைத்ரி அங்கு, இம்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை குறித்த நிகழ்வில் ஞானசார, மலிக் சமரவிக்ரம போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசாங்கம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முஸ்லிம்கள் மீது இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Patholaya justifying to cover up, his and the government's inability, inefficiency, and paralysed mentality! The govt enbloc should resign forthwith if it and it's leaders have any self esteem
Post a Comment