சமூக வலைத்தள தணிக்கை: சீன உதவியை நாடும் இலங்கை! - sonakar.com

Post Top Ad

Sunday 11 March 2018

சமூக வலைத்தள தணிக்கை: சீன உதவியை நாடும் இலங்கை!


சமூக வலைத்தளங்களூடாக இனவாதம் மற்றும் வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டு வருவதை இது வரை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம் கடந்த வாரத்திலிருந்து விழித்துக் கொண்டுள்ளதுடன் சமூக லலைத்தள பாவனைக்குத் தடையையும் உருவாக்கியிருந்தது.

இந்நிலையில் சீனாவில் வெற்றிகரமான 'தணிக்கை' முறைமையினைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் அந்நாட்டிடம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. சீனாவில் சமூக வலைத்தள பாவனைகள் கடுமையான தணிக்கைக்குட்படுத்தப்படுவதோடு அங்கு பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு மாற்று சேவையே பாவனையில் உள்ளது.


தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் பணியாளர்களுக்கு சமூக வலைத்தள தணிக்கை தொடர்பில் பயிற்சிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment