கெலிஓய பிரதேசத்தில் பதற்றத்தைத் தணித்து இனங்களுக்கிடையில் சமாதான சூழ்நிலையை உறுதி செய்யும் வகையில் இனவாதிகளின் பிடியில் அகப்பட வேண்டாம் என பிரதேசத்தின் சிங்கள மக்களே பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேசத்தின் பௌத்த தலைமைகளின் இணக்கப்பாட்டோடு டு விகாரையின் ஏற்பாட்டில் ஒலி பெருக்கியில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதுடன் வதந்திகளை நம்பி சகோதரத்துவத்தை சீர் குலைக்க வேண்டாம் எனவும் வினயமாக வேண்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறிதளவு மாற்றமும் (இன்றிரவு) தென்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment