திகனயில் ஆரம்பித்து சுற்றுப்புறத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மெனிக்ஹின்னயையடுத்து மடவளை பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ள அதேவேளை அவை ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் வெளியிடப்படும். இந்நிலையில் வத்தேகம பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தி விட்டு இனவாதிகள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்தின் போது அங்கு விசேட அதிரடிப்படையினர் விரைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment