ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள நுகவல என்டருதென்ன கிராமத்தில் நிர்க்கதியாக உள்ள சுமார் 300 பேருக்கு அவசர உதவிகள் தேவைப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7ம் திகதி காலையில் கிராமம் தாக்கப் படும் போது காடுகளில் ஓடி ஒளித்தவர்கள் பிற்பகல் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்டு பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்படடவர்களுக்கே உணவு, மருந்து போன்ற உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகளில் ஓடி ஒளிக்கும் போது காயங்கள் ஏற்பட்டதால் பலருக்கு முதலுதவிகள் தேவைப் படுவதாகுவம் தெரிய வருகிறது. தொடர்புகளுக்கு
எம்.ஐ.எம்.சிப்லி -0718581123. 0777 878709
-ஜே.எம். ஹாபீஸ்
No comments:
Post a Comment