நடாஷா மற்றும் தேரரின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 7 June 2023

நடாஷா மற்றும் தேரரின் விளக்கமறியல் நீடிப்பு




இன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பேச்சுக்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நடாஷா, அவரது பேச்சை வெளியிட்ட யுடியுப் தளத்தின் உரிமையாளர் புருனோ மற்றும் எதிர்த்துப் பேசிய ராஜாங்கனே தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


பௌத்தர்களை தூண்டி, இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இதன் பின்னணியில் சூழ்ச்சியிருப்பதாகவும் அரச தரப்பிலிருந்து அவ்வப்போது விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இரு தரப்பினது விளக்கமறியலும் ஜுன் 21 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment