பிரசன்னவை கட்சியை விட்டு வெளியேற்ற முனைப்பு - sonakar.com

Post Top Ad

Friday 28 April 2023

பிரசன்னவை கட்சியை விட்டு வெளியேற்ற முனைப்பு

 



கட்சி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறி வரும் பிரசன்ன ரணதுங்க, தனது ஆளுமையை நிலைப்படுத்த கட்சி உறுப்பினர்களை தனது வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக அவர் மீது பெரமுன உயர் மட்டம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது.


இப்பின்னணியில், பிரசன்ன கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு வெளியில் இயங்குவதாக இருப்பின் அவர் கட்சியை விட்டு வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் தமது ஆளுமையை நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இயங்க வேண்டுமா எனவும் பிரசன்ன தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment