பொலிஸ் வாகனத்தை எரியூட்டிய நபர்கள் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 20 April 2023

பொலிஸ் வாகனத்தை எரியூட்டிய நபர்கள் கைது

 



கடந்த வருடம் மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது மத்திய கொழும்பில் பொலிஸ் வாகனம் ஒன்றை எரியூட்டிய சம்பவத்தின் பின்னணியில் மூவரை கைது செய்துள்ளனர் பொலிசார்.


மத்திய கொழும்பின் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 46 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment