ரணில் மீது அநுரவுக்கு சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 31 January 2023

ரணில் மீது அநுரவுக்கு சந்தேகம்!

 



தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் மீது சந்தேகம் வெளியிட்டுள்ளார் அநுர குமார திசாநாயக்க.


இது தொடர்பில் எதற்கும் ரணிலின் தொலைபேசியை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என விளக்கமளித்துள்ள அவர், இரவு வேளைகளில் ரணிலுக்கு இது தான் வேலையாக இருக்கும் என்றும் அரசியல் கூட்டம் ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.


எனினும், புதிய தேர்தல் ஆணைக்குழு அமைந்தாலும் தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற முடியாது எனவும், நீதிமன்றமே தேர்தலை தடுக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment