கோட்டா ரிட்டர்ன் தாமதம்; ஜனாதிபதி உரையாடல் - sonakar.com

Post Top Ad

Monday 22 August 2022

கோட்டா ரிட்டர்ன் தாமதம்; ஜனாதிபதி உரையாடல்

 



24ம் திகதியளவில் நாடு திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 'தகுந்த' ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பெரமுன தரப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபயவுடன் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியூடாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


பிரத்யேகமாக, பசில் ராஜபக்சவும் ரணிலுடன் இது குறித்து பேசியுள்ள அதேவேளை கோட்டாபயவின் மீள் வருகை தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment