கோட்டா வந்தால் 'பதற்றம்' அதிகரிக்கும்: ரணில் - sonakar.com

Post Top Ad

Monday 1 August 2022

கோட்டா வந்தால் 'பதற்றம்' அதிகரிக்கும்: ரணில்

 



தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு இது சரியான நேரமில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


தற்சமயம் உள்ள சூழ்நிலையில், அவர் நாடு திரும்பினால் அரசியல் பதற்றம் அதிகரிக்கும் எனவும் அவர் விரைவில் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லையெனவும் ரணில் விளக்கமளித்துள்ளார்.


எனினும், கோட்டா நாடு திரும்பவுள்ளதாக அண்மையில் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment