மக்கள் பயன்பெறும் உதவிகளை செய்யவே விருப்பம்: ஜப்பான் - sonakar.com

Post Top Ad

Saturday 2 July 2022

மக்கள் பயன்பெறும் உதவிகளை செய்யவே விருப்பம்: ஜப்பான்

 


வெளிநாட்டு உதவிகளை ராஜபக்ச அரசினூடாக செய்வதற்கு பல நாடுகள் தயங்கி வரும் நிலையில், இலங்கை மக்களைத் தாம் கைவிடப் போவதில்லையென விளக்கமளித்துள்ளது ஜப்பான்.


இப்பின்னணியில், ஐ.நா மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளதாகவும் அதனூடாக நேரடியாக மக்கள் பயனடைவார்கள் என்பதானாலேயே இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜப்பான் விளக்கமளித்துள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளிடம் உதவி பெறும் முன்னெடுப்புகளும் தொல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment