அரசுக்கு எதிராக 'உள்ளாடை' போராட்டம் - sonakar.com

Post Top Ad

Friday 6 May 2022

அரசுக்கு எதிராக 'உள்ளாடை' போராட்டம்

 



அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் மேலும் ஒரு வடிவமாக நாடாளுமன்றுக்கு செல்லும் வீதித் தடைகளில் பல ரகமான உள்ளாடடைகளில் அரச விரோத சுலோகங்களை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர் போராளிகள்.


ஆண் - பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அரச விரோத சுலோகங்களும் கோஷமிடப்பட்டுள்ள அதேவேளை பொலிசார் திருடர்களைக் காப்பாற்றாது மக்கள் பக்கம் நிற்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எனினும், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ராஜபக்சக்கள் செய்து வருவதோடு மக்கள் போராட்டத்தைப் பொருட்படுத்தாது தமது ஆட்சியைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment