கோட்டா தலைமையில் 'சேர' மாட்டோம்: JVP திட்டவட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 April 2022

கோட்டா தலைமையில் 'சேர' மாட்டோம்: JVP திட்டவட்டம்

 


 

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான காபந்து அரசில் ஜே.வி.பி இணைய மாட்டாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது அக்கட்சி.


இது தொடர்பில் விளக்கமளித்துள்ள கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க, போராடும் மக்களின் முக்கிய கோரிக்கை கோட்டாபய பதவி விலகுவதாகும் எனவும் அவ்வாறான சூழ்நிலையில், கோட்டா தலைமையில் இணைய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


இத்தனை கஷ்டங்களை மக்கள் எதிர்நோக்குகின்ற போதிலும் தான் தொடர்ந்தும் பதவியிலிருப்பது குறித்தோ கோட்டாபய சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும், இடைக்கால நிர்வாகம் அமைந்தாலும் தானே பிரதமர் என மஹிந்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment