ரம்புக்கன பற்றி விசாரணை கோரும் பிரதமர் - sonakar.com

Post Top Ad

Wednesday 20 April 2022

ரம்புக்கன பற்றி விசாரணை கோரும் பிரதமர்

 


ரம்புக்கனயில் நேற்றைய தினம் போராளிகள் மீது ஸ்ரீலங்கா பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்து பேர் காயமுற்றிருந்தனர்.


இந்த சம்பவம் குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், பொலிசார் இது குறித்து பக்கசார்பற்ற விசாரணையை நடாத்த வேண்டும் என 'கோரிக்கை' விடுத்துள்ள மஹிந்த ராஜபக்ச தாம் பொலிசாரை நம்புவதாக தெரிவித்துள்ளார்.


தமக்காகவும் சேர்த்தே மக்கள் போராடுகிறார்கள் என்பதை மீறி பொலிசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, ரம்புக்கனயில் குறைந்த பட்ச அதிகாரமே பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment