யாரும் பதவி விலகச் சொல்லவில்லை: கபரால் - sonakar.com

Post Top Ad

Thursday 17 March 2022

யாரும் பதவி விலகச் சொல்லவில்லை: கபரால்

 



சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ முன்பாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபராலை பதவி நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக இன்றைய தினம் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலுக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார் கபரால்.


பதவி விலகும்படி தனக்கு எவ்வித நெருக்குதலும் இல்லையெனவும் அவ்வாறு யாரும் சொல்லவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய பொருளாதார ஆலோசனைக்குழுவுக்குள் பசில் - கபரால் முறுகல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment