5 மிலலியன் கலண்டர்களை அச்சிட 29.4 மில்லியன் ரூபா அரச நிதியை செலவு செய்த வழக்கிலிருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டு திவிநெகும பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய கித்சிறி ரணவக்க மற்றும் அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கடந்த ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், குறித்த வழக்கிலிருந்து இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment