அரசின் காலை வாரிவிட மாட்டோம்: நிமல் - sonakar.com

Post Top Ad

Tuesday 18 January 2022

அரசின் காலை வாரிவிட மாட்டோம்: நிமல்

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் அரசாங்கத்தின் காலை வாரிவிடவோ அல்லது ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபடவோ போவதில்லையென்கிறார் நிமல் சிறிபால டிசில்வா.


இதேவேளை, எதிர்கால ஆட்சியாளராக வருவதற்குக் காணும் நாமல் ராஜபக்சவுக்கு ஏலவே சவால் விடுத்துள்ள தயாசிறி ஜயசேகர, சுதந்திரக் கட்சி தீர்க்கமான முடிவெடுக்கப் போவதாக தெரிவித்து வருகிறார்.


சு.க - பெரமுன உறவு சீர்குலைந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சியினர் வெளியேறினாலும் அவர்கள் மீதான விமர்சனத்தைத் தவிர்க்குமாறு பெரமுன உறுப்பினர்களுக்கு தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment