டொலருக்கு மேலதிக 10 ரூபா சலுகை நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 21 January 2022

டொலருக்கு மேலதிக 10 ரூபா சலுகை நீடிப்பு!

 


வெளிநாடுகளில் பணிபுரிவோர் அமெரிக்க டொலரில் இலங்கையின் வங்கிகளுக்கு பணப் பரிமாற்றும் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக 10 ரூபா வழங்கும் சலுகையை மத்திய வங்கி அறிவித்திருந்தது.


இந்நிலையில, இவ்வருடம் ஏப்ரல் இறுதி வரை குறித்த சலுகை நீடிக்கப்படுவதாக இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கையில் டொலர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் வெளிநாடுகளில் பணி புரிவோரிடமிருந்து பாரிய பங்களிப்பை அரசு எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment