கண்டி: தன்னைத்தானே எரியூட்டிக்கொண்ட மாணவி - sonakar.com

Post Top Ad

Friday 17 December 2021

கண்டி: தன்னைத்தானே எரியூட்டிக்கொண்ட மாணவி

 


தனது கைத்தொலைபேசியில் இருந்த 'விடயங்கள்' வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிய வந்ததன் பின்னணியில் பாடசாலை மாணவியொருவர் தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.


நேற்றிரவு, கலஹா பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கைத்தொலைபேசியைப் பெற்ற சகோதரன் அதில் உள்ள விடயங்களை அவதானித்ததன் பின்னணியில் சர்ச்சையெழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குளியலறைக்குள் சென்று மாணவி தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment