அடுத்த வருடம் தேர்தல் இல்லை! - sonakar.com

Post Top Ad

Thursday 16 December 2021

அடுத்த வருடம் தேர்தல் இல்லை!

 


 

அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல்களை நடாத்தப் போவதாக ஆளுங்கட்சியினர் தெரிவித்து வந்த போதிலும் மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தல் எதுவும் நடக்காது என தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கம் வலுவாக இருந்த நிலையில் 2022 மார்ச் அளவில் தேர்தலை நடாத்த திட்டமிட்டிருந்தது. எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு இறுதி மூச்சில் இருப்பதாக அமைச்சர்களே விசனம் வெளியிட்டு வருகின்றனர்.


இப்பின்னணியில், தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாரில்லையென பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment