கடன் பெற நாடில்லாமல் அரசு அவதி - sonakar.com

Post Top Ad

Monday 13 December 2021

கடன் பெற நாடில்லாமல் அரசு அவதி

 


இலங்கைக்கு கடன் தருவதற்கு உலக நாடுகள் தயங்கி வரும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே ஒரே வழியென ஆளுங்கட்சியின் ஒரு பகுதியினர் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.


இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அவர்களின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க நாட்டில் மேலும் பல சிக்கல்கள் உருவாகும் என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


இதனூடாக சம்பளக் கட்டுப்பாடு மற்றும் டொலர் கையிருப்பு சிக்கல்களை சமாளிக்க முடியாமல் போகும் எனவும் கடனுக்கான ஒப்பந்தத்தை தாங்கும் சக்தி இலங்கைக்கு இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment