ரணிலை பயன்படுத்தி 'கடன்' : அரசு மறுப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 7 December 2021

ரணிலை பயன்படுத்தி 'கடன்' : அரசு மறுப்பு

 


பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளின் உதவியில் இலங்கை தங்கியுள்ள போதிலும் ராஜபக்ச அரசுக்கு போதிய ஆதரவின்மை நிலவி வருகிறது.


இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசின் முக்கிய பதவியொன்றை வழங்கி அதனூடாக வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசு முயற்சி செய்து வருவதாக அரசியல் மட்டத்தில் பேச்சு உருவாகியுள்ளது.


ஆயினும், அது அடிப்படை ஆதாரமாற்றது என இன்றைய தினம் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அரசு சார்பில் மறுதலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment