கட்டாயப்படுத்தி 25% டொலர் பெறும் கபரால் - sonakar.com

Post Top Ad

Wednesday 29 December 2021

கட்டாயப்படுத்தி 25% டொலர் பெறும் கபரால்

 


இலங்கையில் இயங்கும் அனைத்து வர்த்தக வங்கிகளும் தமது அமெரிக்க டொலர் வருவாயில் 25 வீதத்தை மத்திய வங்கிக்கு வழங்கியாக வேண்டும் என்ற கட்டாய அறிவிப்பு மத்திய வங்கி ஆளுனர் கபராலினால் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் ஏற்றுமதியாளர்களிடமிருந்து டொலரைப் பெற்றுக் கொள்ளும் வங்கிகள் இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதற்க தட்டுப்பாட்டை எதிர் நோக்குவர் எனவும் 100ல் 25 இனை மத்திய வங்கி எடுத்துக் கொண்டதும் வங்கிகளில் கையிருப்பு தொடர்ந்தும் குறைந்து கொண்டு செல்லும் எனவும் ஹர்ஷ டி சில்வா விளக்கமளித்துள்ளார்.


டிசம்பர் 27 முதல் அனைத்து வங்கிகளுக்கும் இவ்வாறு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment