பெங்களூர்: இலங்கை தங்கக் கடத்தல் குழு கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 November 2021

பெங்களூர்: இலங்கை தங்கக் கடத்தல் குழு கைது!

 


சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் குழுவொன்று பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எட்டு ஆண்களும் இரு பெண்களுமாக பத்து பேர் இணைந்து 3.2 கிலோ தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்றதாகவும் சுங்க அதிகாரிகள் அதனை முறியடித்துள்ளதாகவும் இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பிலிருந்து பெங்களூர் சென்ற ஸ்ரீலங்கன் விமானத்திலேயே கடந்த சனிக்கிழமை குறித்த குழு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment