நானிருந்தால் விவசாயிகளுக்கு கஷ்டம் வந்திருக்காது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday 1 November 2021

நானிருந்தால் விவசாயிகளுக்கு கஷ்டம் வந்திருக்காது: மைத்ரி

 


இயற்கை உரத்தினைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டத்தை தனது ஆட்சிக்காலத்திலேயே அமுலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தான் ஆட்சியில் இருந்திருந்தால் விவசாயிகள் இன்று போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டடார்கள் என்று தெரிவிக்கிறார்.


நடைமுறை அரசு யாருடைய அறிவுரையையும் கேட்கத் தயாராக இல்லையெனவும் அதற்கான முயற்சிகள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போய் விட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை போட்டியிட வைப்பதற்கு கட்சி மட்டத்தில் முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment