எரிபொருள் இறக்குமதி; சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அனுமதி - sonakar.com

Post Top Ad

Tuesday 26 October 2021

எரிபொருள் இறக்குமதி; சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அனுமதி

 


எதிர்வரும் வருடத்தின் முதல் எட்டு மாதங்கள், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதியளித்துள்ளது அரசாங்கம்.


விட்டொல் ஏசியா என அறியப்படும் நிறுவனத்துக்கே அமைச்சரவை கூடி ஆராய்ந்து அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் அடுத்த வருடம் இலங்கையில் தொடர்ச்சியான எரிபொருள் இறக்குமதி இடம்பெறும் எனவும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லையெனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment